ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.
அந்தவகையில் காலிமுகத்திடல் மற்றும் ஜனாதிபதிசெயலக முன்றலில் இடம்பெற்றுவரும் அரசாங்கத்திற்கு எதிரான தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் இன்று 38வது நாளை எட்டியுள்ளது.
இதேவேளை காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டகளம் கோட்டா கோ கம என ஆர்ப்பாட்டக் காரர்களால் பெயரிடப்பட்டுள்ளதுடன் அங்கே நூலகம், வைத்தியசாலை, சர்வதேச ஊடக நிலையம் ,சூரிய சக்தி மின்உற்பத்தி நிலையம், நடமாடும் மின்நிலையம் , திரையரங்கு என பல்வேறு வசதிகளை உள்ளடக்கியதாக காணப்படுகின்றது.
இதேவேளை தற்போது ஆர்ப்பாட்ட காரர்களால் கோட்டா கோ கம விளையாட்டுத் திடலும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

