அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரின் இலங்கைக்கான முன்னாள் கொன்சியூலர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல காலமானார்.
உடல் ஆரோக்கியமின்மை காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் இன்று காலை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் போது தேசிய பாதுகாப்புக்கான ஊடக மையத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் லக்ஷ்மன் ஹுலுகல்ல கடமையாற்றியிருந்தார்.