டொலர் இல்லை: ஒருவாரமாக கொழும்பு கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ள எரிபொருள் கப்பல்…

எரிசக்தி அமைச்சினால் இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய் கப்பலுக்கு அரசாங்கம் பணம் செலுத்தத் தவறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஒரு வாரத்திற்கும் மேலாக கொழும்பு துறைமுகத்திற்கு வெளியே ஒரு கச்சா எண்ணெய் தாங்கி கப்பல் நங்கூரமிடப்பட்டுள்ளது.

குறித்த தொகையை செலுத்தி கப்பலை இறக்கினால் எரிபொருள் மற்றும் மின்சார பிரச்சினை ஓரளவுக்கு தணியும் என தெரிவிக்கப்படுகின்றது.

எனவே அதனை விடுவிப்பதற்கான டொலர்களை திரட்டும் நடவடிக்கையில் தற்போது அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *