முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்யுமாறு கோரி இன்று வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்னால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
நாளை வெசாக் தினத்தில் அவரை விடுதலை செய்யுமாறு கோரி குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இந்த போராட்டத்தில் நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்வது குறித்து கலந்துரையாடப்பட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்திருந்தார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்றுள்ள ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதேவேளை , அதிகளவில் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் ரஞ்சன் ராமநாயக்க விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நியமானது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.