இலங்கைக்கு நியூஸிலாந்து 5 லட்சம் டொலர் நிதியுதவி

இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள நியூஸிலாந்து 5 லட்­சம் டொலரை வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனை நியூ­ஸி­லாந்­தின் வெளி­வி­வ­கார அமைச்­சர் நனையா தனது ருவிற்றர் பதிவில் தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் மற்றும் சிறுவர்களுக்காக இந்த நிதி வழங்கப்படுகிறது என நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை நியூசிலாந்து கடந்த 30 ஆண்டுகளில் இலங்கை அபிவிருத்தி திட்டங்களுக்காக 25.7 மில்லியன் நியூஸிலாந்து டொலரை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *