பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டதற்கு தனியார் பேருந்து உரிமையாளர்கள் கண்டனம்!

இம்மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மையின் போது தனியார் பேருந்துகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அடித்து நொறுக்கப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டதால் சுமார் 40 பேருந்துகள் பயன்படுத்த முடியாத நிலையில் அழிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

பொலிஸ் இருக்கும் போதே வன்முறைக் குழுக்கள் தாக்கி பேருந்துகளின் உதிரிபாகங்களைத் திருடியதாக அவர் கூறினார்.

கும்பல் தாக்குதல்கள் மற்றும் பயங்கரவாதச் சம்பவங்களுக்கு எதிரான பாதுகாப்பு காப்பீட்டுத் தொகையில் இருந்து நீக்கப்படுவதாக காப்பீட்டு நிறுவனங்கள் அறிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது தனியார் பேருந்துகளை இயக்க முடியாமல் சிரமங்களை சந்தித்தனர். இந்த சம்பவம் அவர்களின் துயரங்களை மேலும் மோசமாக்கியது என்றும் கூறினார்.

உலகிலேயே மிகவும் ஒழுக்கம் மற்றும் கல்வியறிவு கொண்ட நாடாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இலங்கை மக்கள் ஏன் வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *