
கொழும்பு,மே 14
அலரி மாளிகையில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற கூட்டத்துக்கு வாடகை அடிப்படையில் அனுப்பி வைக்கப்பட்ட தனியார் பஸ்களில் சுமார் 40 பஸ்கள் மீள் புதுப்பிக்க முடியாதளவுக்கு தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன், பஸ்களின் உதிரிபாகங்களும் திருடப்பட்டுள்ளன.
அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளுக்கு இனி தனியார் பஸ்களை வழங்க போவதில்லை என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள பின்னணியில் சமூக கட்டமைப்பில் அமைதியற்ற நிலைமையும் தீவிரமடைந்துள்ளது.
அலரி மாளிகையில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற அரசியல் கூட்டத்தை தொடர்ந்து காலி முகத்திடல் அமைதி வழி போராட்டகாரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கும்,அதனை தொடர்ந்து நாட்டில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுக்கும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ பொறுப்புக்கூற வேண்டும்.
மேலும் தீக்கிரையாக்கப்பட்டுள்ள பஸ்களுக்கு காப்புறுதிகளும் வழங்க முடியாது என காப்புறுதி நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.