
புதிய அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குமாறு கோரி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு கடிதம் மூலம் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்தக் கடிதத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பதிலளித்துள்ளார்.
அதில்,
ராஜபக்சக்கள் இல்லாத அரசாங்கம் அமைய வேண்டும் என்பதே நாட்டு மக்களின் கோரிக்கை என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.
இதனால் புதிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்க மறுப்பு தெரிவிக்கிறேன்.
எனினும் பொருளாதாரம் தொடர்பில் எடுக்கப்படும் சரியான தீர்மானங்களுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு வழங்கும் என குறிப்பிட்டு பதிலளித்துள்ளார்.