
கோத்தாவை எதிர்க்க கூட்டமைப்பினர் முடிவு!
ஜனாதிபதி கோத்தாபயவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
கோத்தாபயவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் எதிர்வரும் 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. அதனை ஆதரிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.