
கொழும்பு,மே
அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவை தட்டுப்பாடுகளை துரிதமாக நீக்கி, மக்களின் தேவைகளை நிறைவேற்றுவது சம்பந்தமான யோசனைகளை பெற்று அவற்றை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க சிறப்பு குழுவை ஒன்றை வெள்ளிக்கிழமை நியமித்திருந்தார்.
இதில் மருந்து தட்டுப்பாட்டுக்கு தீர்வுகாணும் பொறுப்பு ஐ.தே.கவின் பிரதி தலைவர் ருவான் விஜேவர்தனவுக்கு வழங்கப்பட்டது.
சனிக்கிழமை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபன பிரதானிகள், அரச வைத்திய அதிகாரிகள், சுகாதாரத்துறை ஊழியர்கள் உடபட சுகாதாரத்துறை நிபுணர்களுடன் ருவான் விஜேவர்தன, கலந்துரையாடி விரைவாக நாட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள மருந்துகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த கலந்துரையாடலில் பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, சுகாதார தொழிற்சங்கங்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டாளர் சமன் ரத்னபிரிய, ஐ.தே.கவின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.