
மும்பை,மே 14
ஐபிஎல் 15வது சீசன் சுவாரசியமான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த ஐபிஎல் தொடரின் சில நாட்களுக்கு முன்னர் சென்னை அணியின் கேப்டன் பதவியில் டோனி விலகினார்.
சென்னை அணியின் கேப்டனாக தொடக்கத்தில் நியமிக்கப்பட்ட ஜடேஜா பின்னர் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அதை தொடர்ந்து மீதமுள்ள போட்டிகளில் இருந்து தற்போது டோனி செயல்பட்டு வருகிறார் .
இந்நிலையில் டோனிக்கு பிறகு சென்னை அணியின் நீண்ட கால கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் இருக்க முடியும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
மகாராஷ்டிரா அணிக்கு அவர் கேப்டனாக இருக்கிறார். 100 ரன்கள் அடித்த பிறகு அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார் அல்லது 0 ரன்களில் வெளியேறிய பிறகு அவர் மிகவும் சோகமாக இருக்கிறார் என்பதை அவருடைய வெளிப்பாடுகளிலிருந்து நீங்கள் புரிந்து கொள்ள முடியாது.அவர் மிகவும் அமைதியானவர்.
சிறந்த கேப்டனாக இருப்பதற்கு தேவையான அனைத்து தகுதிகளும் அவரிடம் உள்ளன. அவர் முதல்தர கிரிக்கெட்டில் கேப்டனாக இருப்பதால் ஒரு போட்டியை எவ்வாறு கட்டுப்படுத்துவது என அவருக்கு யோசனை இருக்கும்.
மேலும், ‘ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சீசன் நன்றாக அமையலாம். ஆனால் அவர் (ருதுராஜ் கெய்க்வாட் ) இன்னும் 3 முதல் 4 சீசன்களில் விளையாடினால், டோனிக்கு பிறகு நீண்ட கால கேப்டனாக அவரால் (ருதுராஜ் கெய்க்வாட்) இருக்க முடியும். என்னால் கருத்தை மட்டும் தெரிவிக்க முடியும் என சேவாக் தெரிவித்துள்ளார் .