
கொழும்பு,மே
நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைளையும் இன்றும் நாளையும் மூடுமாறு இலங்கை மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜே. குணசிறி அறிவித்துள்ளார்.
வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டே இரு நாட்களுக்கு மதுபான சாலைகள் மூடப்படவுள்ளது.
இதேவேளை இரண்டு தினங்களிலும் சட்டத்தை மீறும் வகையில் மதுபானசாலைகளில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதா என்பதை கண்டறிவதற்கு விசேட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் குறித்து நாட்டின் சகல மதுவரித் திணைக்களத்தின் நிலைய பொறுப்பு அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.