நாடு சீராக குறைந்நது ஒரு வருடம் தேவை: எம்.கணேசமூர்த்தி

கொழும்பு,மே 15

நாடானது பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. மக்கள் பொருட்களை பெற்று கொள்ள வரிசையில் நிற்பதோடு, சில பொருட்கள் மக்களுக்கு கிடைப்பதும் இல்லை.

இந்நிலையில், நாடு தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு சுமார் ஒரு வருட காலம் எடுக்கும் என கொழும்பு பல்கலைகழகத்தின் பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.

எமது வானொலியில் ஒலிபரப்பான விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

விழுதுகள் நிகழ்ச்சியின் முழுமையான காணொளியினை கீழே இணைக்கப்பட்டுள்ள சூரியனின் யூடியுப் தளத்தில் பார்வையிட முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *