பிரதான கொறடாவாக பிரசன்ன, சபை முதல்வராக தினேஷ்!

ஆளும் கட்சியின் பிரதான கொறடாவாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவும் சபை முதல்வராக தினேஷ் குணவர்தனவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டதன் பின்னரான முதலாவது நாடாளுமன்ற அமர்வு நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது.

இதன்போது ரஞ்சித் சியம்பலாபிட்டிய பிரதி சபாநாயகர் பதவியிலிருந்து விலகியமை அடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கான தெரிவும் இடம்பெறவுள்ளது.

இதற்கமைய குறித்த பதவிக்காக ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்னவின் பெயர் முன்வைக்கப்பட்டுள்ளதாக சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

இதேவேளை பிரதி சபாநாயகர் பதவிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்ஷவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *