
கொழும்பு,மே 15
மேலும் இருவர் அமைச்சர்களாகப் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, சுசில் பிரேமஜயந்த கல்வி அமைச்சராகவும், அநுர பிரியதர்ஷன யாப்பா விவசாய அமைச்சராகவும் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாமன்றத்துக்கு பிரவேசித்த இவர்கள் இருவரும் அண்மையில் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.