
இன்றும் நாளையும் தனியார் பஸ் சேவைகள் மட்டுப்படுத்தப்பட உள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
டீசல் பற்றாக்குறையால் பஸ் சேவைகளை மட்டுப்படுத்த வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளமையால், ரயில் சேவைகள் இன்று பிற்பகல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.