
வழுக்கை தலை குறித்து கேலி செய்வது பாலியல் குற்றம் என இங்கிலாந்து தொழிலாளர் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.
இங்கிலாந்தின் மேற்கு நகரிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் 24 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த ஒருவர் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக அவர் இங்கிலாந்தின் தொழிலாளர் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அவர் தன்னுடைய மனுவில் தனது நிறுவனத்தின் உயர் அதிகாரி தன்னை வழுக்கை என்று கேலி செய்தார் எனவும் அதற்கு எதிா்ப்பு தெரிவித்ததால் நியாயமற்ற முறையில் தான் பணி நீக்கம் செய்யப்பட்டேன் எனவும் கூறியிருந்தார்.
இந்த வழக்கு 3 நீதிபதிகளைக் கொண்ட அமர்வின் முன்பு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் ‘‘பணியிடங்களில் பெண்களின் அங்கங்களை கேலி செய்வது பாலியல் குற்றம் என்பதைபோல், ஆண்களின் வழுக்கையை கேலி செய்வதும் பாலியல் குற்றத்துக்குள் அடங்கும்.
அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நிறுவனம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” என்று தீா்ப்பளித்துள்ளனர்.