
வடகொரியாவில் 3 நாட்களில் 8 லட்சத்து 20 ஆயிரத்து 620 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவும் 42 பேர் இதுவரை உயிரிழந்து உள்ளனர்.
வடகொரோனாவில் தொற்று பரவல் முதன்முறையாக ஏற்பட்டுள்ளது என கடந்த 12ஆம் திகதி அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் வடகொரியாவில் இதுவரை எவரும் தடுப்பூசி போடவில்லை. அத்துடன் அங்கு மருந்துத் தட்டுப்பாடும் நிலவுகிறது.
எவரும் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத நிலையில் போதிய சிகிச்சை வசதிகள் இல்லாத நிலையிலும் வடகொரியா என்ன செய்யப் போகிறது என உலக நாடுகள் கவலை வெளியிட்டுள்ளன.
அத்துடன் அசுரவேகத்தில் தொற்று வேகமாக பரவி வருகின்றது.
கடந்த 3 நாள்களில் தொற்றுப் பாதிப்புக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 20 ஆயிரத்து 620 ஆக உயர்ந்து உள்ளது. பலியானோரின் எண்ணிக்கையும் 42 ஆக உயர்வடைந்துள்ளது.
அங்குள்ள அனைத்து மாகாணங்கள், அனைத்து நகரங்களிலும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வட கொரியாவில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வராவிட்டால் அது பேரழிவுகளை ஏற்படுத்தி விடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.