
கொழும்பு,மே 15
அரசாங்கத்தில் இருந்து விலகிய 10 கட்சிகளின் தலைவர்களுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்திருந்தார்.
தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்கவே இந்த அழைப்பு பிரதமரால் விடுக்கப்பட்டு இருந்தது.
இதற்கு “இன்று மாலை தமது கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்குப் பிறகு நேரம் ஒதுக்கப்படும்” என அவர்கள் பதிலளித்துள்ளனர்.