21 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் நாளை கலந்துரையாடல்: ரணில்

கொழும்பு,மே 15

21 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் நாளைய திங்கட்கிழமை கலந்துரையாட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

பிரதமர் ஊடகப்பிரிவு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 21 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்படப்பட்டுள்ளது.

மேலும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த இரண்டு நாட்களாக மேற்கொண்ட கலந்துரையாடலுக்கு அமைய நாட்டின் பொருளாதார நெருக்கடி குறித்த முழுமையான விளக்கத்தை நாட்டு மக்களுக்கு வழங்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *