வெசாக் தினத்தினை முன்னிட்டு வவுனியா சிறையிலிருந்து மூவர் விடுவிப்பு

வெசாக் தினத்தினை முன்னிட்டு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையிலிருந்து மூன்று கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

வெசாக் தினத்தையொட்டி இன்று நாடளாவிய ரீதியில் 244 சிறைக்கைதிகள் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையிலிருந்து சிறுகுற்றங்களை புரிந்த மூன்று பேர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

எனினும் அவர்களில் இருவர் வேறு குற்றச்சாட்டுக்களிலும் தண்டனை அனுபவித்து வந்த நிலையில் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *