கிளையொன்றை வெட்டுவதற்காக மாமரத்தில் ஏரிய குடும்பஸ்த்தர் ஒருவர் மாமரத்தில் இருந்து தவறி
விழுந்ததால் உயிரிழப்பு
இச்சம்பவமானது நேற்று பகல் மானிப்பாய், சங்குவேலி பகுதியில் இடம்பெற்றுளது
இவ்வாறு உயிரழந்தவர் தெற்கைச் சேர்ந்த நாகேந்திரம் நகுலேந்திரன் (வயது 48) என்ற 6 பிள்ளையின் தந்தையே என தெரியவந்துள்ளது.
குறித்த மரத்தில் 25 அடி உயரத்திற்குச் சென்று கிளையொன்றை வெட்டும் போது அவர் நின்ற கிளை முறிந்ததால் தவறி விழுந்துள்ளார்.
கீழே விழுந்து சுயநினைவின்றி காணப்பட்ட அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் இறப்பு விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.