
கொழும்பு, மே 16
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பான உண்மையான தகவல்களை மக்களுக்கு அறிவிக்க தீர்மானித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், புதிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள செயற்றிட்டங்கள் தொடர்பிலும் மக்களுக்கு தெளிவுபடுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 21 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்படப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசேட அறிவிப்பொன்றை நாட்டு மக்களுக்கு இன்றைய தினம் வெளியிடவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.