நாடாளுமன்ற அமர்வுகள் நாளை: புதிய சபாநாயகர் தெரிவு – ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து வாக்கெடுப்பு

பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னர் முதன்முறையாக நாளை (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றம் கூடவுள்ளது.

நாடாளுமன்றத்தில் நாளைய தினம் ரஞ்சித் சியம்பலாபிட்டியவினால் ஏற்பட்ட பிரதி சபாநாயகர் பதவி வெற்றிடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை நியமிப்பதே முக்கிய நடவடிக்கையாக முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்படி, பிரதி சபாநாயகர் பதவிக்கு இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்ஷவின் பெயரும், ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் ரோஹினி கவிரத்னவின் பெயரும் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி நாளை வாக்கெடுப்பு நடத்தப்பட்டு புதிய பிரதி சபாநாயகர் தெரிவு செய்யப்படவுள்ளார்.

மேலும், நாளை மேலும் இரண்டு நாடாளுமன்றத் வாக்கெடுப்புகள் நடைபெறவுள்ளன.

அதன்படி, நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்துவதற்கான பிரேரணை மற்றும் ஜனாதிபதி மீதான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு என்பன நடைபெறவுள்ளன.

இதேவேளை, நாளை நாடாளுமன்ற ஆசனங்களில் மாற்றம் இடம்பெறவுள்ளது. எவ்வாறாயினும், இது தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று பிற்பகல் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் (SLPP) உயர்மட்ட பிரதமர் ஆசனம் வழங்கப்படவுள்ளது.

இதேவுளை, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னாள் ஜனாதிபதியாக இருப்பதால் அவருக்கும் முன்வரிசை ஆசனம் ஒதுக்கப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *