
கொழும்பு, மே 16
நாட்டின் பொருளாதார நலனுக்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எடுத்துள்ள தீர்மானங்களுக்கு ஆதரவளிப்பதற்கு அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் பத்து சுயாதீன அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளன. பத்து கட்சிகளின் உறுப்பினர்கள் நேற்று கூடி இந்த முடிவை எடுத்துள்ளனர்.
வாசுதேவ நாணயக்கார உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவங்ச ஆகியோர். இந்த பத்து கட்சிகளை சேர்ந்த மூன்று கட்சிகளின் தலைவர்களாவர். இதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பத்து கட்சிகளின் உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (16) காலை நடைபெறவுள்ளது.

