சீரற்ற காலநிலை: ஒருவர் காயம் – 820 குடும்பங்கள் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஒருவர் காயமடைந்துள்ளதுடன், ஆயிரத்து 820 குடும்பங்களைச் சேர்ந்த 7ஆயிரத்து 337 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் கடும் மழையுடன் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலைமை சீரடைந்து வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

எனினும் சீரற்ற காலநிலை காரணமாக சுமார் 52 குடும்பங்களைச் சேர்ந்த 209 பேர் தற்காலிக தடுப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *