பொலிஸார் தங்கள் அதிகாரத்துக்கு உட்பட்டே செயற்பட வேண்டும் – விஜயகாந்த் வலியுறுத்து

பொலிஸார் தங்கள் அதிகாரத்துக்கு உட்பட்டே செயற்பட வேண்டும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் சமீபகாலமாக விசாரணை கைதிகள் மர்மமான முறையில் மரணமடையும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்ற நிலையில் அவர் இதனை கூறியுள்ளார்.

கடந்த மாதம் 18 ஆம் திகதி கைது செய்யப்பட்ட சென்னையை சேர்ந்த இளைஞர் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டபோது மர்மமான முறையில் உயிரிழந்தார்.

அவரது உடலில் 13 இடங்களில் காயங்கள் இருந்ததால் பொலிஸார் அடித்து துன்புறுத்தியதாலேயே உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.

பொலிஸார் உங்கள் நண்பன் என்ற சொல் பெயரளவில் இல்லாமல் மக்களுக்கு உரிய பாதுகாப்பாக இருக்க வேண்டும் என விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *