
ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்கியதன் பின்னணியில் இந்தியா உள்ளதாக பலரும் கூறுகின்றார்கள். நாங்கள் அவ்வாறு எதுவும் மேற்கொள்ளவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரிடம் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால்பாக்லே தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை அவர் சந்தித்துக் கலந்துரையாடியபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பொருளாதார நிலைமை மோசமாகவுள்ளது. ஓர் உறுதியான அரசாங்கம் அமையப்பெறவேண்டும். அப்போதுதான் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க முடியும்.
ஓர் உறுதியான அரசாங்கம் அமையப்பெறவேண்டும் என்பதில் கரிசனை செலுத்தினோம். அதேவேளை பிரதமராக ரணில் அல்ல வேறு யார் வந்தாலும் நாம் தொடர்ந்து பணியாற்றியிருப்போம் என்றும் அவர் அந்தச் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.