கிளிநொச்சியில் இருந்து முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றதிற்கு செல்ல விசேட போக்குவரத்து !

கிளிநொச்சியில் இருந்து முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றத்தைச் சென்றடையும் வகையில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன்படி, 1. காலை 8.00 மணிக்கு முழங்காவிலில் இருந்து புறப்படும் பேருந்து வாடியடி, பரந்தன் ஊடாகவும்

2.காலை 8.30 மணிக்கு, பளை நகரில் அமைந்துள்ள தமிழ் அரசுக் கட்சியின் பச்சிலைப்பள்ளிப் பிரதேச அலுவலகத்திலிருந்து புறப்படும் பேருந்து புதுக்காடு, இயக்கச்சி, பரந்தன் ஊடாகவும்

3.காலை 9.00 மணிக்கு பரந்தன் சந்தியிலிருந்து புறப்படும் பேருந்து முரசுமோட்டை, கண்டாவளை, புன்னைநீராவி ஊடாகவும்

4.காலை 9.00 மணிக்கு வட்டக்கச்சி சந்தையடியிலிருந்து புறப்படும் பேருந்து புளியம்பொக்கணைச் சந்தி ஊடாகவும்

5.காலை 9.00 மணிக்கு கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலுக்கு முன்பாக உள்ள, தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்திலிருந்து புறப்படும் பேருந்து கரடிப்போக்கு, பரந்தன் ஊடாகவும்

முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றத்தைச் சென்றடைந்து, நினைவேந்தல் நிகழ்வுகள் நிறைவுற்றதும் அதே வழித்தடத்தின் ஊடாக மீளத் திரும்பவுள்ளன.

நினைவேந்தலில் பங்கேற்கவுள்ள கிளிநொச்சி மாவட்ட மக்கள்,மேற்படி பேருந்துகளைப் பயன்படுத்தி, தங்களின் போக்குவரத்து இடையூறுகளைத் தவிர்த்துக்கொள்ளலாம் என்பதை தயவுடன் அறியத்தருகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *