முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை துண்டறிக்கை சிங்களவரால் கிழிப்பு!

ஆஸ்திரேலியாவில் மெல்பேர்ன் நகரில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக நேற்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்போது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக் நீதிகோரிய துண்டறிக்கைகள் தமிழ் மக்களால் விநியோகிக்கப்பட்டபோது, போராட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரால் அது கிழித்து எறியப்பட்டது.

‘அவர் கிழித்தெறிந்தது துண்டறிக்கையை மாத்திரமல்ல, மூவின மக்கள் வாழும் – இனவெறியற்ற – இலங்கைக்காக போராடுகின்றோம் என்ற முகத்திரையையும்தான்’ என்று துண்டறிக்கைகளை விநியோகித்த தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *