பொத்துவிலிலிருந்து முள்ளிவாய்க்கால் நோக்கிய பேரணி நேற்று ஆரம்பம்!

முள்ளிவாய்க்கால் படுகொலையின் 13ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு ‘இன விடுதலை தேடி முள்ளிவாய்க்கால் நோக்கிய பயணம்’ எனும் தொனிப்பொருளில் மக்கள் எழுச்சிப் பேரணி கிழக்கு மாகாணத்தில் பொத்துவிலில் இருந்து நேற்று ஆரம்பமானது.

பேரணியானது திருக்கோவில், அக்கரைப்பற்று, கல்முனை, களுவாஞ்சிகுடி ஊடாக கல்லடி பாலம் வரையில் சென்று நிறைவடைந்துள்ளது.

திருக்கோவில் விநாயகபுரம் பகுதியில் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட ஏழு இளைஞர்களின் ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இன்றைய தினம் மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை நோக்கிய பயணம் அமையும். 17ஆம் திகதி திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவைச் சென்றடைந்து 18ஆம் திகதி முல்லைதீவிலிருந்து முள்ளிவாய்க்கால் முற்றத்துக்கு சென்றடையவுள்ளது.

இதேவேளை யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையிலிருந்து முள்ளிவாய்க்காலை நோக்கிய பேரணி இன்று ஆரம்பமாகவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *