பிரதமரினால் நியமிக்கப்பட்டுள்ள விசேட குழுக்களின் அறிக்கைகள் கையளிக்கப்படுகின்றன

அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், உரம் மற்றும் பெற்றோலியம் தொடர்பான நெருக்கடிகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட விசேட குழுக்களின் அறிக்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரச்சினைகளுக்கான காரணங்கள் மற்றும் அவற்றைத் தீர்ப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன குறித்து அந்த குழுக்கள் கவனம் செலுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த குழுக்களின் செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு, மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான விரிவான செயற்பாடுகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் நன்மைகள் குறுகிய காலத்தில் மக்களுக்கு கிடைக்கும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *