சகல பொலிஸ் பிரிவுகளிலும் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு

கொழும்பு, மே 16

சட்டம் ஒழுங்கை தொடர்ந்தும் பேணுவதற்கு அனைத்து பொலிஸ் பிரிவுகளிலும், நடமாடும் குற்றத்தடுப்பு கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவித்தல் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

குற்றச்செயல்களில் ஈடுபட சிலர் தூண்டப்படுவதாக புலனாய்வு திணைக்களத்திற்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

எனவே, அதனை தவிர்க்கும் வகையில் சகல பொலிஸ் பிரிவுகளிலும் பொலிஸ் தடைகளை ஏற்படுத்தி கண்காணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *