யாழ்ப்பாணம்,மே 16
யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவிகள் தங்கியிருக்கும் விடுதியில் இனம்தெரியாத நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
யாழ். தொழில்நுட்ப கல்லூரிக்கு அருகில் உள்ள விடுதியிலேயே இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
குறித்த விடுதியில் இருந்த பொருட்கள், ஜன்னல் கண்ணாடிகள் என்பன சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



