டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கை

கொழும்பு, மே 17

தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான சந்தர்ப்பமாக, தற்போதைய அரசியல் சூழலை தமிழ் தரப்புகள் பயன்படுத்த வேண்டுமென ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வினைக் காணும் நோக்குடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுள்ளதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அரசியல் சூழலைப் பயன்படுத்தி, பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மக்களை மீட்பது மாத்திரமன்றி, தமிழ் மக்களின் அரசியல் தீர்விற்கான அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளை தமிழ் தரப்புகள் மேற்கொள்ள வேண்டும் எனவும்  டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *