பாராளுமன்ற வளாகத்திற்குள் இனந்தெரியாத குழுவொன்று

கொழும்பு, மே 17

பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் அல்லாத குழுவொன்று பாராளுமன்ற வளாகத்திற்குள் பிரவேசித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

இன்று (17) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் அல்லாத குழுவொன்று பாராளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்து தொலைபேசி மூலம் வீடியோ எடுத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனவே பாராளுமன்ற உறுப்பினர்ளின் பாதுகாப்பு தொடர்பில் அந்த நபர்கள் யார் என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *