
நாடாளுமன்றத்துக்கு இன்று முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோர் பிரசன்னமாகவில்லை. ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில், சர்வகட்சி அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் இன்று முதலாவது நாடாளுமன்ற அமர்வு நடத்தப்படுகிறது. எனினும் இதன்போது மகிந்த ராஜபக்ச, நாமல் ராஜபக்ச ஆகியோர் பங்கேற்கவில்லை.
ஏற்கனவே கோட்டாகோகம தாக்குதல்களுக்கு காரணமாக இருந்தார் என்ற குற்றச்சாட்டு மகிந்த ராஜபக்ச உட்பட்டவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பிரதி சபாநாயகரின் தெரிவு தொடர்பில் நாடாளுமன்றில் இன்று தீவிர நிலை ஏற்பட்டது.
சர்வகட்சி அரசாங்க நாடாளுமன்ற அமர்விலும் ஆளும் எதிர்கட்சியினர் மோதல் நிலை! ஏற்கனவே பிரதி சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்ட ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய அந்த நிலையில் இருந்து விலகியைதை அடுத்து, பிரதி சபாநாயகருக்கான தெரிவை சபாநாயகர் கோரினார்.இதனையடுத்து, ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் ரோஹினி கவிரட்னவை பிரதி சபாநாயகராக, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச முன்மொழிந்தார்.
இதனையடுத்து ஆளும் கட்சியின் சார்பில் அஜித் ராஜபக்சவின் பெயர் முன்மொழியப்பட்டது.