
கொழும்பு, மே 17
அமைச்சு பதவிகளை ஏற்று புதிய அரசாங்கத்தில் இணைந்து கொள்வதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் இதை தெரிவித்தார் சஜித் பிரேமதாச இந்த நாட்டின் எதிர்காலத் தலைவர், அதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் இந்த தருணத்தில் நாம் அரசியலைப் பற்றி சிந்திக்காமல் புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இன்னும் ஆறு மாதங்களில் எமக்கு ஒரு நாடு இருக்காது, இந்த நெருக்கடியை தீர்க்க புதிய அரசாங்கத்தில் சஜித் பிரேமதாசவும் அனுரகுமார திஸாநாயக்கவும் இணைவதை நான் விரும்புகிறேன் என்று அவர் மேலும் கூறினார்.
கோட்டாபய ராஜபக்ஸவை வெற்றி பெற வைக்க நான் அரசாங்கத்தில் இணைய மாட்டேன், கோட்டா தோல்வியடைந்துவிட்டார், இப்போது இந்த தோல்வியுற்ற நபரை வெளியே அனுப்ப வேண்டும், ஆனால் அது அரசியலமைப்பின் மூலம் நடக்க வேண்டும் என்றார்.