
கொழும்பு,மே 17
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் மறைவினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு புதிய நபர் ஒருவரை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட ஜகத் சமரவிக்ரம நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளார்.
இதேவேளை, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மையின் போது உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.