ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

கொழும்பு,மே 17

ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்த கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு பிரிவினரால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலிமுகத்திடல் மற்றும் அலரி மாளிகை பகுதிகளில் கடந்த 09 ஆம் திகதி இடம் பெற்ற அமைதியின்மை சம்பவங்கள் தொடர்பிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்த கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *