திருகோணமலை,மே 17
எரிபொருளுக்கான தட்டுப்பாடு தொடரும் வேளையில் டீசலுக்கான தட்டுப்பாடும் கூடுதலாக காணப்படுகிறது.
திருகோணமலை, முள்ளிப்பொத்தானை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசலினை பெறுவதற்காக பல தூரம் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தன.
செவ்வாய்க்கிழமை மாலை டீசல் வந்ததன் காரணமாக அலை மோதி டீசலினை பெற்றுகொண்டனர்.
இருந்த போதிலும் கடந்த 8 நாட்களுக்கு பின்னர் டீசல் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு கிடைக்கப்பெற்றதாக தெரியவருகிறது.
இதனால் கேன்களில் டீசலை பெறுவதற்காக அலை மோதி முந்தியடித்துக் கொண்டு வரிசை ஒழுங்கின்றி பெற்று வந்த நிலையில், அவ் விடத்தில் இராணுவம், பொலிஸார் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.
