எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சாரம் துண்டிக்கப்படுவதால் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுக்கும் மக்கள்!

எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சாரம் துண்டிக்கப்படுவதால் மக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

தற்போது எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையினால் நாட்டின் பல பாகங்களிலும் எரிபொருள் மற்றும் எரிவாயுவிற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தமையினை இன்றும் அவதானிக்க முடிந்தது.

இதனால் முச்சக்கரவண்டி சாரதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோன்று மெனிங் சந்தை உள்ளிட்ட பொருளாதார நிலையங்களுக்கு மரக்கறிகளை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் மெனிங் வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், ஒவ்வொரு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு டீசல் வழங்கப்படுகின்ற போதிலும், பெற்றோல் வழங்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மாளிகாவத்தை பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 6 மணித்தியாலங்களுக்கு மேலாக வரிசையில் காத்திருந்த ஒருவர் வீடு திரும்பும் போது திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 58 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *