சிஐடியிடம் வாக்குமூலம் வழங்கவுள்ள பொதுஜன பெரமுன எம்பிக்கள்

கொழும்பு,மே 17

அலரி மாளிகைக்கு முன்பாகவும் காலி முகத்திடலிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் பொதுஜன பெரமுன  நாடாளுமன்ற உறுப்பினர்கள்  6 பேரிடம் புதன்கிழமை (18) குற்றப் புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பெறவுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ,  பவித்ரா வன்னியாராச்சி,  சஞ்சீவ எதிரிமான்ன, ரோஹித  அபேகுணவர்தன, சிபி ரத்நாயக்க மற்றும் இந்திக அனுருத்த ஆகியோரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பெறவுள்ளனமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *