யாழில் முதியவர் தூக்கிட்டு தற்கொலை

யாழ்ப்பாணம்,மே 17

கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வரணி, நாவற்காட்டு பகுதியில் தனிமையில் இருந்த முதியவர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (17) காலை அவரது வீட்டிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வரணி நாவற்காட்டு பகுதியைச் சேர்ந்த 65 வயதான வ.துரைராசா என்ற முதியவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

முதியவரது சடலம் மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனைகளுக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *