அமல் சில்வா, மொரட்டுவை நகர சபை சேவையாளருக்கு விளக்கமறியல்

கொழும்பு,மே 17

கடந்த மே மாதம் 9ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா மற்றும் மொரட்டுவ மாநகர சபையின் ஊழியர் ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த உத்தரவை கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே செவ்வாய்க்கிழமை மாலை பிறப்பித்துள்ளார்.

அதன்படி இருவரும் புதன்கிழமை (18) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *