வர்த்தகர்களுக்கு எதிரான வழக்கு: ரூ.12 லட்சம் அபராதம்

நுவரெலியா,மே 18

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த நான்கு மாதங்களில் 12 இலட்சம் ரூபா அபராதமாக அறவிடப்பட்டுள்ளதென மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

நுவரெலியா, வலப்பனை, ஹட்டன், நாவலப்பிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 106 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டு இவ்வாறு அபராதம் அறவிடப்பட்டுள்ளது.

பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு அமைய குறித்த வர்த்தகர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *