லிட்ரோ நிறுவனம் மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு

கொழும்பு, மே 18

நேற்றைய தினம் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக எரிவாயு கப்பல்களில் இருந்து எரிவாயுவை தரையிறக்க முடியாமல் போனதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதனால் எரிவாயு விநியோகம் இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

எனவே மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *