யாழ்.சண்டிலிப்பாயில் இளைஞன் மீது சரமாரி வாள்வெட்டு

யாழ், மே 18

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் தொட்டிலடி பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

அளவெட்டியைச் சேர்ந்த ஏ. ரதீஸ்வரன் (வயது-37) என்பவரே தலையில் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நபர் “அளவெட்டி கனி” என அழைக்கப்படுபவர் என்றும் ,அவர் வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதேவேளை  இந்த நபர் “வட்டிக்கு கொடுத்த பணத்தை வசூலிப்பதற்காக சண்டிலிப்பாய் பகுதிக்கு வந்த போது , மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட குழுவே வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *