
கொழும்பு, மே 18
காலி முகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு அருகில் இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 6 பேரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று(புதன்கிழமை) வாக்குமூலம் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பவித்ரா வன்னியாராச்சி, சஞ்சீவ எதிரிமான்ன, ரோஹித அபேகுணவர்தன, சி.பி.ரத்நாயக்க மற்றும் இந்திக்க அனுருத்த ஆகியோரிடமே வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.
வாக்குமூலங்களைப் பெறுவதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் ஐந்து குழுக்கள் நேற்றைய தினம் நாடாளுமன்றத்திற்குச் சென்றிருந்த போதிலும், அது இன்று வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.