மீதமுள்ள படையினரைக் காப்பாற்ற உக்ரைன் நடவடிக்கை !

மரியுபோலின் அஸொவ்ஸ்டல் பகுதியிலிருந்து, எஞ்சியுள்ள படையினரை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

உக்ரைனின் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் ஹன்னா மலியர் இதனைத் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.

ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் இருந்து கடந்த திங்கட்கிழமை காயமடைந்த படையினர் உட்பட 264 இதுவரை வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அத்துடன், நேற்றைய தினம் 7 பேருந்துகள் அங்கிருந்து வெளியேறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு டான்பாஸ் பிராந்தியத்தில் ரஷ்ய சார்பு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஒலெனிவ்கா என்ற கிராமத்திற்கு அவர்கள் வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *